ராமேஸ்வரத்தில் ஆம்புலன்ஸ் மீது ஆட்டோ மோதல் குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

ராமேஸ்வரம், ஜன.12: ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ்வாகனத்தில் ஆட்டோ மோதிய சம்பவத்தில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். அவசர சிகிச்சைக்காக ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு நோயாளியை  ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே சாலையின் குறுக்கே சென்ற ஆட்டோ ஒன்று ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆட்டோவிற்குள் இருந்த நான்கு பெண்கள், ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே நோயாளிகளுடன் சென்ற ஆம்புலன்ஸ் தொடர்ந்து ராமநாதபுரம் நோக்கி சென்றது. ஆம்புலன்ஸ் மீது மோதியதில் ஆட்டோவின்  முன்பகுதி சேதமடைந்ததுடன் அருகில் சென்று கொண்டிருந்த மற்ற ஆட்டோக்களின் மீதும் மோதியது. இதனால் மேலும் இரண்டு ஆட்டோக்களும் சேதமடைந்தன. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து ராமேஸ்வரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: