உசிலம்பட்டி, ஜன.12: உசிலம்பட்டியில் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்குவதற்காக அங்குள்ள தனியார் அலுவலகத்தில் ஆன்லைனில் பதிவு செய்து வந்தனர். அட்டை வழங்குவதற்கு ஆன்லைன் பதிவிற்கு ரூ.350 முதல் ரூ.750 வரை வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக புரோக்கர்கள் சிலர் இருப்பதாகவும், ஆன்லைனில் பதிவு செய்த பிறகு செல்போனிற்கு எஸ்எம்எஸ் வந்த பிறகும் நலவாரிய அட்டை வழங்கவில்லை எனக் கூறி நேற்று உசிலம்பட்டி ஜவுளிக்கடை தெருவிலுள்ள தனியார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.