திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். பின்னர் அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் சூரியபிரகாஷ் கூறுகையில், ‘திண்டுக்கல் மாவட்ட தொழில் மையத்தின் ஆலோசனைப்படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற விண்ணப்பித்து உள்ளோம். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தபால் மூலம் வழங்கப்படும் கடிதத்தை நமது மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் பரிசீலிப்பதில்லை. அதன் கிளை மேலாளர்களும் அந்த கடிதத்தை வாங்கி பார்ப்பதே இல்லை. இதனால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கடன் பெற முடியாமலும், சுயதொழில் செய்ய முடியாமலும் அவதிப்படுகின்றனர். வங்கி மேலாளர்கள் காட்டும் அலட்சியம் படித்த இளைஞர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்துவதுடன், சுயதொழில் முனைவோராக ஆர்வம் காட்டாத நிலையை உருவாக்குகிறது.