டாஸ்மாக் கடை 3 நாட்கள் மூடல்

திண்டுக்கல், ஜன. 12: திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ, எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள், மதுபான விற்பனை தலங்கள் அனைத்தும் வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம், 28ம் தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களில் மூடப்பட்டிருக்கும். அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மீறி விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Stories: