சூலூர், ஜன.12: சூலூர் அருகே சுல்தான்பேட்டை குமாரபாளையம் பகுதியில் தனியார் நிறுவன மேலாளர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சூலூர் அருகே சுல்தான்பேட்டை குமாரபாளையத்ைத சேர்ந்தவர் சார்லஸ் ஜான் வயது (62). இவர் அதே பகுதியில் உள்ள தென்னை நார் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலின். ஓடக்கல் பாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்றனர். செலின் மாலையில்தான் வீடு திரும்புவார். சார்லஸ் மதிய உணவிற்காக நேற்று வீட்டிற்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் கம்பெனிக்கு வராததால் சந்தேகமடைந்த கம்பெனி ஊழியர்கள் கணேசன், தங்கராஜ் ஆகியோர் சார்லசின் வீட்டிற்குச் சென்றனர். கதவு திறந்திருந்ததால் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.