திருப்பூர், ஜன.12: திருப்பூர் பின்னலாடை நிறுவன தொழிலாளர்களுக்கு ஜன.13ம் தேதி முதல் பொங்கல் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருப்பூர் ஆடை உற்பத்தி மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 6 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தினமும் ஓய்வின்றி பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுதவிர, தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் விடுப்பு எடுப்பதை தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, பெரும்பாலான தமிழக தொழிலாளர்கள், கூடுதல் நாட்கள் விடுப்பு எடுத்து, சொந்த ஊர்களுக்குச் சென்று, பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.