ஈரோடு, ஜன. 12: ஈரோடு மாநகரில் குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என த.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் (த.ம.மு.க) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மயில் துரையன் முன்னிலை வகித்தார். இதில், ஈரோடு மாநகராட்சி முழுவதும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமித்து, அரசு மருத்துவமனை முழுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு முன்பு 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவித்து அரசாணையை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.