பைக் - ஆட்டோ மோதல் சிறுவன் பலி

திருப்பூர், ஜன. 11: திருப்பூரில் பைக்-ஆட்டோ மோதிய விபத்தில் சிறுவன் பலியானான். திருப்பூர் செட்டிபாளையத்தை அடுத்த ஏ.ஆர்.பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் சஞ்சய்குமார் (16), கடந்த மாதம் 16ம் தேதி மாலை சஞ்சய்குமார் பைக்கில் வெங்கமேடு, அங்கேரிபாளையம் சாலையில் வந்த போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ மோதியது. இதில் சஞ்சய்குமார் படுகாயமடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு பலியானார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: