கணவர் கண்ணெதிரே மனைவி பலி

ஓமலூர், ஜன.11: சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். மேச்சேரியில் உறவினர் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக, தனது மனைவி விஜயாவுடன்(40) நேற்று மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். ஓமலூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, மேட்டூரில் இருந்து சாம்பல் லோடு ஏற்றிச்சென்ற லாரி மோதியது. இதில், சாலையில் விழுந்த விஜயா மீது லாரி ஏறியதால் உடல் நசுங்கிய அவர், கணவர் கண்ணெதிரே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசார், விரைந்து சென்று விஜயா உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories: