மக்கள் கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.11: கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி ஊராட்சி மாதேப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று பேசுகையில், ‘விவசாய திருத்த சட்டத்திற்கு ஆதரவாக உள்ள அதிமுகவின் ஆட்சி தொடர்ந்து நீடித்தால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதை உணர்ந்து, அதிமுக அரசை வரும் சட்டமன்ற தேர்தலில் நிராகரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் மலர செய்ய அனைவரும் உறுதி ஏற்று, அதற்காக உழைத்திடுங்கள்,’ என்றார்.

இதில், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் தனசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், துணை தலைவர் முகமதுகவுஸ், ஊராட்சி செயலாளர் சந்திசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வாசுதேவன், கதிரவன் செங்குட்டுவன், சேட்டு, தங்கவேல், டீசல் பழனி, அனுமுத்துராஜ், பிரகாஷ், மகாதேவன், மன்சூர், ஒன்றிய குழு உறுப்பினர் கிருபாகரன், கவுதம், பெருமாள், அர்ச்சுனன், கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: