கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

தர்மபுரி, ஜன.11: இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி சென்றனர். இதேபோல், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான்கோட்டை, பாளையம்புதூர், தொப்பூர் அரூர், மொரப்பூர் உள்ளிட்ட 17 இடங்களில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: