மக்கள் கிராமசபை கூட்டம்

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி சட்ட மன்ற தொகுதி, பாலஜங்கமனஅள்ளியில் திமுக சார்பில், மக்கள் கிராம சபைக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வக்கீல் சிவம் தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெங்கட்ராமன் வரவேற்றார். மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம், துணை செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், வக்கீல் மணி, சக்திவேல், பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு: காரிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஜக்கசமுத்திரம் ஊராட்சி பந்தாரஅள்ளி கிராமத்தில், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால் தலைமையில், மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஹரிபிரசாத் ஏற்பாடு செய்திருந்தார். இதில், தக்காளி மண்டி முருகன், சண்முகம், மாதேசன், தனகோட்டி, வழக்கறிஞர் சந்திரசேகர், ஓபுளி மாரியப்பன், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: