திருச்சி, ஜன.11: திருச்சியில் தேசிய செட்டியார்கள் பேரவையின் மாநில மகளிரணி மாநாடு தாஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை வகித்து பேசுகையில், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் செட்டியார்களுக்கு அதிக தொகுதிகளை கொடுக்கும் கட்சிகளிடம் கூட்டணி சேருவோம் என கூறினார். மாநாட்டில் கவுரவத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, அன்பழகனார், சேமநாராயணன், பன்னீர்செல்வம் , ஜெயராமன் , மாநில பொருளாளர் கணேசன், பாஸ்கர், தனியார் பத்திரிக்கை ஆசிரியர் மோகன், மாநில மகளிர் அணி பொருப்பாளர்கள் ராஜேஸ்வரி, கீதா. மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சிவகாமசுந்தரி, சந்திரா, ஐடிவிங்க் மாநில துணைச்செயலாளர் பானுப்பிரியா, மகேஸ்வரி மற்றும் திருச்சி மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்களான முத்துமீனா, முத்துலெட்சுமி, மஞ்சு கெஜலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.