கலெக்டர் தகவல் கட்டிமேடு ஊராட்சியில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

திருத்துறைப்பூண்டி, ஜன.11: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் கடந்த நிவர் மற்றும் புரவி புயலினால் கன மழை மற்றும் தற்போது பெய்துவரும் மழையால் தெருக்களின் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இந்நிலையில், அகமது தெரு, மர்க்கஸ் பட்டன் தெரு, சத்திரம் ஆற்றங்கரை தெரு சாலை, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மைதானம் ஆகிய பகுதி சாலைகளில் உடைந்த செங்கற்களை கொட்டி, பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கப்பட்டது.

Related Stories: