பொங்கலை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கறம்பக்குடி, ஜன.11: கறம்பக்குடியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது வியபாரிகள் சங்க செயலாளர் ஐயப்பன் வரவேற்று பேசினார். வியாபாரிகள் சங்க தலைவர் சாந்தியமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தாசில்தார் ஷேக்அப்துல்லா, மாநில வணிகர் சங்க பேரவை துணை தலைவர் மற்றும் மாவட்ட வர்த்தக சங்க கவுரவ தலைவர் சீனு சின்னப்பா, கறம்பக்குடி காவல் துறை இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, வியாபாரிகள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை, போர்வை மற்றும் மாஸ்க் உள்ளிட்ட நலத்திட்ட உதவிதிகளை 300 பேருக்கு வழங்கினர்.

Related Stories: