எஸ்பி பேட்டி பெரம்பலூர்அருகே புத்தாண்டு விழா போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

பெரம்பலூர்,ஜன.11: பாளையம் கிராமத்தில் 175 ஆண்டுகள் பழமையான புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. இங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டி கைகளை முன்னிட்டு கத்தோலிக்கக் கிறிஸ்தவ இறை மக்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கிறிஸ்துப்பிறப்பை முன்னறிவிக்கும் விதமாக வீடுகளில் சிறப்பாக அமைக்கப்பட்ட குடில்களுக்கும், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று புனித சூசையப்பர் தேவாலயம் பங்குகுரு ஜான் கென்னடி, தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், சிறந்த குடில்களை அமைத்த குடும்பத்தாருக்கும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

Related Stories: