பஸ் மோதி பெண் பலி

ஈரோடு, ஜன. 11: ஈரோடு வீரப்பன் சத்திரம் பெரியவலசு நால் ரோடு பகுதியை  சேர்ந்த ராஜ் மகன் முனியாண்டி(30). கட்டிட தொழிலாளி. முனியாண்டி நேற்று  அவரது ஸ்கூட்டரில், அவருடன் வேலை பார்க்கும் சித்தோடு ராயர்பாளையம் புதூர்  தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி லட்சுமி (55) என்பவரை  அழைத்துக்கொண்டு ஈரோட்டில் இருந்து பவானி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது எதிரே வந்த நாகலாந்து மாநிலத்தின் பதிவெண் கொண்ட தனியார் பஸ் எதிர்பாரதவிதமாக முனியாண்டி ஸ்கூட்டரில் மோதியது.  இதில், நிலை தடுமாறி ரோட்டில் விழுந்த லட்சுமியின் தலையின் மீது பஸ்  சக்கரம் ஏறி இறங்கியதில், லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். முனியாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது  குறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் லட்சுமியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து  வருகின்றனர்.

Related Stories: