கீழக்கரையில் மக்கள் கிராமசபை கூட்டம்

கீழக்கரை, ஜன.11: கீழக்கரை மறவர் தெருவில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி செயலாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சேது பொறியியல் கல்லூரி சேர்மனும் கீழக்கரை பொறுப்பாளருமான முகமது ஜலீல் கலந்து கொண்டார்.  கூட்டத்தில், தங்கள் பகுதியில் சாலை வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லை, குடிநீர் வசதிகள் இல்லை, குறிப்பாக முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என மக்கள் புகார் கூறினர்.

கூட்டத்தில் நகர அவைத்தலைவர் மணிகண்டன், நகர துணைச் செயலாளர் ஜமால் பாரூக், கென்னடி, நகர பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதி மரைக்கா, இளைஞர் அணிச் செயலாளர் இப்திகார் ஹசன், மூர் அசனுதீன், செல்வ விநாயகம், பஞ்சநாதன், சடையாண்டி, பயாஸ், நைம் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு முகமது ஹாஜா நன்றி கூறினார்.

Related Stories: