கீழக்கரை, ஜன.11: கீழக்கரை மறவர் தெருவில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி செயலாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சேது பொறியியல் கல்லூரி சேர்மனும் கீழக்கரை பொறுப்பாளருமான முகமது ஜலீல் கலந்து கொண்டார். கூட்டத்தில், தங்கள் பகுதியில் சாலை வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லை, குடிநீர் வசதிகள் இல்லை, குறிப்பாக முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என மக்கள் புகார் கூறினர்.