மனைவியை பார்க்க வந்தவருக்கு கத்திக்குத்து

பல்லாவரம், ஜன.11: பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ்(31). எலட்ரீஷியன். இவரது மனைவி சன்மா கர்ப்பமாக இருப்பதால் தனது தாய் வீடான ஓட்டேரி பிரிஸ்லி நகர் 3வது தெருவில் உள்ளார். அவரைப் பார்ப்பதற்காக சரண்ராஜ் நேற்று முன்தினம் மாலை வந்தபோது அதே பகுதியை சேர்ந்த மதி, ராசு, நல்லப்பன் உள்ளிட்ட 5 பேர் முன்விரோதம் காரணமாக சரண்ராஜை கத்தியால் தலை மற்றும் கையில் வெட்டினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: