காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி, நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா

காஞ்சிபுரம், ஜன.11: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக விவசாய அணி மற்றும் காஞ்சிபுரம் நகர திமுக இணைந்து நடத்திய தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். நகர செயலாளர் சன்.பிராண்ட் கே.ஆறுமுகம் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட பெண்கள் சமத்துவ பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

மேலும், ஒயிலாட்டம், மங்கள இசை, பரதநாட்டியம், சிலம்பாட்டம், கோலப்போட்டி  மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக விவசாய அணி செயலாளர் கருர் ம.சின்னசாமி விவசாய அணி துணை செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்த விழாவில் காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, எஸ்.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், குமணன், சாலவாக்கம் குமார், சேகர் மற்றும் விவசாய அணி எல்லப்பன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: