திருவள்ளூர், ஜன. 11: திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கம் காலனி, பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சிகாமணி (58) கூலி தொழிலாளி. இவரது மனைவி தீபாஞ்சி (54). இவர்களது மகன் டில்லிபாபு (33). டில்லிபாபு மனைவி நிஷாந்தினி (30). இவர்களது குழந்தை ஹரீஷ் (2). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக வீட்டின் சுவர் ஈரத்தில் நனைந்து முன்பக்க சுவர் சரிந்து கீழே விழுந்து விட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு டில்லிபாபு வேலைக்கு சென்று விட்டார். மேலும் 4 பேர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு 11 மணி அளவில் திடீரென பின்பக்க சுவரும் இடிந்து சரிந்தது.