மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை, ஜன. 11: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், கீரின்வேல் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த . துரைசாமி என்பவர் வயல் வெளிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மீனு என்கிற மீனா என்பவர் மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பல்வேறு நிகழ்வுகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: