×

என்எல்சியில் அப்ரண்டீஸ் முடித்தவர்கள் வேலை கேட்டு போராட்டம்

நெய்வேலி, ஜன.7:நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி (அப்ரண்டீஸ்) பெற்று உள்ளனர். பயிற்சி முடித்து 24 ஆண்டுகளாகியும் இதுநாள் வரை வேலை வழங்க வில்லை. இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி நேற்று 400க்கும் மேற்பட்டோர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் என்எல்சி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, வட்டம்  27ல் உள்ள என்எல்சி  திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்களை போலீசார் விடுவிடுத்தனர். ஆனால் ஒரு பிரிவினர் மட்டும் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, என்எல்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Tags : Apprentice graduates ,struggle ,NLC ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...