×

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, சிவகங்கை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (நவ.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவ.22ம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம் வலுப்பெறும் என்றும்
48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுப் பெறும் . மேற்கு – வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான , மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

 

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Theni ,Madurai ,Sivaganga ,Tenkasi ,Kumari ,Virudhunagar ,Ramanathapuram ,Thoothukudi ,
× RELATED மதிமுக வேட்பாளர் உதய சூரியன்...