தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி,101 இறக்கைகள் கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டது என்ற முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் நேற்று 103 இறக்கைகள் கப்பலில் இருந்து பாதுகாப்பாக கையாளப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 2300 காற்றாலை இறக்கைகள் இத்துறைமுகத்தில் கையாளப்பட்டுள்ளன.  இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 61% அதிகம் ஆகும்.

Related Stories: