×

காவல்துறை எச்சரிக்கை நள்ளிரவில் சாலை மறியல்: 13 பேர் கைது

ஜெயங்கொண்டம், டிச.31: திண்டுக்கல்லில் கிரிவலம் சென்றதாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். இந்த தகவலின் பேரில் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சுப்பிரமணியத்தை விடுவிக்க கோரியும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் இந்து முன்னணியினர் நள்ளிரவில் 10க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...