×

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாமில் 23 மனுக்கள் பெறப்பட்டது

அரியலூர் அக்.24: மாவட்ட எஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று நடைபெற்றது . மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாசாஸ்திரி தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 23 மனுதாரர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

 

Tags : District SP ,Ariyalur ,District Police Office ,Ariyalur District Police Office ,Ariyalur District ,Superintendent ,Vishwesh… ,
× RELATED பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்