×

நீச்சல் பயின்றபோது புழல் ஏரியில் மூழ்கி போக்குவரத்து ஊழியர் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த அப்துல் மரக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது யாசின் (39). இவர், சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை புழல் ஏரியில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக தனது நண்பருடன் சென்ற முகமது யாசின், நீச்சல் கற்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டனர். பின்னர் செங்குன்றம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Puzhal lake ,Puzhal ,Mohammed Yasin ,Abdul Marakkayar Street ,Sengunram ,Chennai Metropolitan Transport Corporation ,Pallavan Illam, Chennai ,
× RELATED நீர் மேலாண்மைக்கான தேசிய விருதுகள்...