தடையை மீறி கிராமசபை கூட்டம்: 2 எம்எல்ஏக்கள் உள்பட 50 பேர் மீது வழக்கு

மரக்காணம், டிச. 27: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று முன்தினம் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டம் நடத்த காவல்துறை சார்பில் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி நடந்த மக்கள் சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விவசாயிகள், உப்பள தொழிலாளர்கள், வணிகர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், இளைஞர்கள், மீனவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், மரக்காணத்தில் தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தியதாக கூறி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, திண்டிவனம் சீத்தாபதி சொக்கலிஙகம் எம்எல்ஏ, நகர செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் கண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தயாளன், ஒன்றிய அவை தலைவர் சாந்தமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் ஏகவள்ளி உள்பட 50 பேர் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: