திருவண்ணாமலை, டிச.24: குறைதீர்வு கூட்டங்களில் அளிக்கும் மனுக்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கக்கோரி, திருவண்ணாமலையில் விவசாயிகள் சாட்டையால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று, நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, குைறதீர்வு கூட்டங்களில் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கும், தபால் மூலம் அனுப்பும் கோரிக்கை மனுக்களுக்கும் மனுவை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.