உத்தரவாதமில்லாத ஆட்சி அதிமுக கடலூரில் நடிகர் கமல் சாடல்

கடலூர், டிச. 23: கடலூரில் மக்கள் நீதி மய்ய பிரசார கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தொடர்ச்சியாக புயல் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்து வரும் போதிலும் அதற்கு முழுமையான நடவடிக்கை இதுவரை இல்லை. ஒவ்வொரு மழைக்காலத்திலும் தரை பாலங்கள் உடைந்து போவது தொடர்ந்து வருகிறது. சாதாரணமாக ஒரு பேட்டரியை வாங்கினால் கூட அதற்கு உத்தரவாதம் கொடுக்கிறார்கள்.

ஆனால் இங்கு இந்த ஆட்சியில் பாலம் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் உத்தரவாதம் இல்லை. இதுபோன்ற ஆட்சி நமக்கு தேவையா என சிந்தியுங்கள், வீழ்த்துங்கள். தொழில் துறையில் முன்னேற வேண்டிய கடலூர் மாவட்டம் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. வீராணம் ஏரியை தூர் வாருவதில் ஊழல். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை. நான் பேச பயப்படவில்லை. உண்மையை தான் பேசி வருகிறேன். நான் பேசினால் பயப்படுகிறார்கள். ஜனநாயகத்தில் மக்கள் தான் நாயகர்கள். நாங்கள் சேவகர்கள், என்றார்.

Related Stories: