திருமணத்தை கடந்து ரகசிய உறவு: வீட்டு கதவை தட்டி உல்லாசத்திற்கு அழைத்த பாஜ பிரமுகருக்கு கள்ளக்காதலி கத்திக்குத்து; 31 தையல்களுடன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருமணத்தை கடந்து ரகசிய உறவால் குடிபோதையில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி உல்லாசத்திற்கு அழைத்த பாஜ பிரமுகரை, கள்ளக்காதலி ஒருவர் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த பாஜ பிரமுகர் 31 தையல்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சாலிகிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர்(51). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், பாஜ சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவராக பணியாற்றி வருகிறார். சுரேந்தர் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இவருக்கு சாலிகிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருடன் கட்சி பணியின் போது நட்பு கிடைத்தது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பிரியதர்ஷினி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பிரியதர்ஷினியின் கணவர் உடல் நிலை காரணமாக வேலைக்கு செல்ல வில்லை. அவரது மகன் கல்லூரியில் படித்து வருகீறார். இதனால் செலவுக்கு அடிக்கடி சுரேந்தர் தனது கள்ளக்காதலிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அதன்படி லோன் கட்டுவதற்காக கள்ளக்காதலி பிரியதர்ஷினி கேட்ட ரூ.5 ஆயிரத்தை நேற்று முன்தினம் சுரேந்தர் கொடுத்துள்ளார். அந்த வகையில் பிரியதர்ஷினிக்கு சுரேந்தர் மொத்தம் ரூ.50 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு பணம் கொடுத்ததால் சுரேந்தர் தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். அதற்கு பிரியதர்ஷினி நாளை வருவதாக கூறி செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்தர் மது போதையில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள பிரியதர்ஷினி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பிரியதர்ஷினி வீட்டின் கதவை பலமாக சுரேந்தர் கட்டியுள்ளார். உடனே பிரியதர்ஷினியின் கணவர் மற்றும் மகன் கதவை திறந்துள்ளனர். அப்போது சுரேந்தர், பிரிதர்ஷினி எங்கே உடனே வெளியே வர சொல்லுங்க என்று கூறி தகராறு செய்துள்ளார்.

கணவன் மற்றும் மகன் ஆகியோர் ‘நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது, எனது மனைவியை எப்படி நீ பெயரிட்டு அழைப்பாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிற்குள் இருந்த பிரியதர்ஷினி தனது கள்ளக்காதல் விவகாரம் கணவன் மற்றும் மகனுக்கு தெரிந்துவிடும் என்பதால், அவரும் நீ யார் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சுரேந்தர் போதையில் ‘நீ என் ஒப்பாட்டி…. என்னை பார்த்து யார் என்று கேட்கிறாயா’ உனக்கு என் பணம் மட்டும் வேண்டும், நீ நான் அழைத்தால் வரமாட்டியா என கேட்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வெளியே வந்து வேடிக்கை பார்த்தனர்.

இதனால் ரகசியமாக வைத்திருந்த கள்ள உறவு வெளியே தெரிந்துவிட்டது என்ற ஆத்திரத்தில், பிரியதர்ஷினி சமையல் அறையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து சுரேந்தர் உடலில் சரமாரியாக குத்தி கிழித்தார். இதில் பலத்த காயமடைந்த சுரேந்தர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு அங்கு டாக்டர்கள் சுரேந்தருக்கு 31 தையல்கள் போட்டு உள்நோயாளியாக சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின் படி விரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலி பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சாலிகிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: