திருச்சி, ஆக.14: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாவட்ட மைய நூலகத்தில் இன்று (ஆக.14) மாலை 5 மணிக்கு சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியினை யோகா ஆசிரியர்கள் முருகேஸ்வரிஸ்ரீனிவாஸ் மற்றும் அழகிரிசாமி வழங்க உள்ளனர். வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட மைய நுாலக அலுவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
