சேலம், டிச.4: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளை நசுக்குகின்ற வகையில், விவசாய விரோத சட்டங்களை, மோடி அரசு இயற்றியதால் விவசாய நாடான இந்தியாவில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி சர்க்காரின் தலைநகரம் விவசாயிகளால் முற்றுகையிடப் பட்டுள்ளது. இந்த விவசாய விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என இந்தியாவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு எதிரான சட்டத்தை நிறைவேற்ற கூடாது என தமிழகத்தை சேர்ந்த திமுக கூட்டணி கட்சியின் 39 எம்பிக்களும் சேர்ந்து, மோடிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். ஆனால், அதிமுக எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.