ஓசூர்,டிச.4: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றத்தினர் நேற்று ஓசூர் காந்தி சிலை அருகில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத் ராவ், நகர இணைச்செயலாளர் எஸ்.குமார், ஒன்றிய இணைச்செயலாளர் முருகன், சுதாகர், நகர நிர்வாகி சத்யா, நகர துணைச்செயலாளர்கள் சரவணன், திருவரங்கம், சீனி, ராஜன், ராவ், ராஜ்குமார், மாரியப்பன், முன்ராஜ், புஷ்பராஜ்,சீனிவாசன், வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் சரவணன், நகர ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் பர்கூர் ஒன்றிய இணை செயலாளர் நிசார், விவசாய அணி ஒன்றிய செயலாளர் அர்ஜூனன், ரியாஸ், ஜெயபால், முனீர், மார்க்கண்டேயன், சேகர், சரவணன், புளியம்பட்டி பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.