பாலக்கோடு டிச.4: பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சிகளில் செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் சாலையோர கடைகள் உள்ள பகுதியில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கின்றனரா என தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளின் இயக்குனர் கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், சுகாதார பணிகள், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் சுத்திகரிப்பு, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் எடுக்கப்படும் கிணறுகள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி உடனிருந்தார்.