சாலையோரம் நிறுத்தியிருந்த தொழிலதிபர் காரில் லேப்டாப், பணம், செல்போன் திருட்டு

திருச்சி, டிச.4: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வேல் நகரை சேர்ந்தவர் சிவபிரகாஷ்குமார்(42), தொழிலதிபர். இவர் நேற்று முன்தினம் தொழில் தொடர்பாக திருச்சி வந்துவிட்டு ஊருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு 10 மணி அளவில் கன மழை பெய்ததால் திருச்சி-திண்டுக்கல் சாலை பிராட்டியூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் முன் காரை நிறுத்திவிட்டு தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் கண்விழித்து பார்த்தபோது காரிலிருந்த பேக்கை காணவில்லை. அதில் விலை உயர்ந்த லேப்டாப், செல்போன், பணம், ஆதார் கார்டு மற்றும் லைசென்ஸ் இருந்தது. இது குறித்து சிவபிரகாஷ்குமார் எ.புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Related Stories: