×

நேட்டோவில் இணையும் பின்லாந்து: ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கடி

பிரஸ்சல்: நேட்டோ அமைப்பின் 31வது உறுப்பு நாடாக பின்லாந்து இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வௌியாகியுள்ளது. நேட்டோ என்பது அட்லாண்டிக் ஒப்பந்த கூட்டமைப்பு. 1949ம் ஆண்டு அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இத்தாலி, மற்றும் 8 ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கிய மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோ அமைப்பில் கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் 30வது நாடாக இணைந்தது. நேட்டோவில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே ரஷ்யா கடந்த ஓராண்டாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைன் அப்பாவி பொதுமக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தலைநகர் கீவ், பர்குட் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சிதிலமடைந்துள்ளன. உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேட்டோ அமைப்பின் 31வது நாடாக பின்லாந்து இணையவுள்ளது. பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தலைமையக கட்டிடத்தில் பின்லாந்து கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பின்லாந்து வௌியுறவுத்துறை அமைச்சர் ஹவிஸ்டோ கூறுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். ரஷ்யாவுடன் பகிரப்படும் பின்லாந்து எல்லைகளில் ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்வதால் இப்போது நேட்டோவில் இணைவது முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறியுள்ளார். நேட்டோவில் பின்லாந்து இணைவதால் ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது 3ம் உலகப் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனிடையே, ஸ்வீடனும் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த மனு பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

The post நேட்டோவில் இணையும் பின்லாந்து: ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கடி appeared first on Dinakaran.

Tags : Finland ,NATO ,President ,Brussels ,Putin ,Dinakaran ,
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...