×

ஏப்.13ம் தேதி வரை இம்ரான்கானுக்கு 3 வழக்கில் ஜாமீன்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கடந்த மாதம் போலீசார் கைது செய்ய அவரது ஜமான்பார்க் இல்லத்திற்கு சென்ற போது போலீசாருக்கும், இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் தீவிரவாத தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லாகூர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று இம்ரான்கான் நேரில் ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு பிரிவு வழக்கு நீதிபதி அப்கர் குல் கான் வரும் ஏப்.13ம் தேதி வரை 3 வழக்குகளில் இம்ரான்கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

The post ஏப்.13ம் தேதி வரை இம்ரான்கானுக்கு 3 வழக்கில் ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Lahore ,Zaman Park ,Pakistan ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு