×

மோர் பந்தல் அமைக்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: கோடையில் நீர், மோர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு தலை வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி(அதிமுக பொதுச் செயலாளர்): அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும், குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆங்காங்கே தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைத்து பொதுமக்களின் தாகத்தை தணித்திட வேண்டும்.
டிடிவி.தினகரன்: தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமமுக நிர்வாகிகள் திறந்திட வேண்டுகிறேன்.

The post மோர் பந்தல் அமைக்க எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Mor Pandal ,Chennai ,Edappadi Palaniswami ,AIADMK ,General Secretary ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்