திருப்பூர் மாவட்டத்தில் 63 பேருக்கு கொரோனா

திருப்பூர், டிச. 4:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்து 578ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 210 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 61 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டம் முழுவதும் 14,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது,520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: