கள்ளக்குறிச்சி, டிச. 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சூ.பள்ளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக மஞ்சுளாதேவி (39) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்த போது அதே கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் வேலாயுதம் (41) என்பவர் அலுவலகத்துக்கு சென்று வேறு நபரின் பெயரில் உள்ள சிட்டாவை கொடுத்து அடங்கல் கேட்டுள்ளார். சிட்டாதாரரை வரசொல்லுங்கள், அப்போதுதான் தரமுடியும் என கூறி அனுப்பி வைத்துள்ளார். விஏஓ அலுவலக பணி காரணமாக வெளியே சென்றுவிட்டு பின்னர் அலுவலகத்துக்கு வந்த போது யாரோ பொக்லைன் இயந்திரத்தால் விஏஓ அலுவலகத்தை இடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.