×

பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் மீட்பு

கடையம், டிச. 4:  கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மவுனசாமி மகன் மகேஷ்ராஜா (43). இவரும், கடையம் பாரதி நகரை சேர்ந்த விஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதி இருவரும் கடையம் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில் திருப்பூரில் வசித்து வரும் உறவினர்களை பார்ப்பதற்காக விஜி சென்றிருந்தார். ஆந்திராவில் வேலை பார்த்து வந்த மகேஷ்ராஜா, கடந்த வாரம் வீட்டிற்கு திரும்பினார். இதனிடையே கடையத்தில் பூட்டிக் கிடந்த மகேஷ்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் நேற்று மாலை  கடையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐக்கள் ஜெயராஜ், சரசையன், எஸ்பி எஸ்ஐ சேகர், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு ஆனந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகேஷ்ராஜா உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். மகேஷ் ராஜா நீரழிவு  நோயால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags : Recovery ,home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...