திருச்செந்தூர், டிச. 4: திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினருடன் போலீஸ் ஐஜி சாரங்கன் ஆலோசனை நடத்தினார்.
புரெவி புயலை முன்னிட்டு திருச்செந்தூரில் வெள்ள அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்ட அமலிநகர், ஆலந்தலை கடற்கரை பகுதிகளில் அரக்கோணத்தில் இருந்து வருகைதந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹெர்சிங் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அத்துடன் புயல் எச்சரிக்கை குறித்த அறிவிப்புகளையும் மைக் மூலம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.