உடன்குடி, டிச.4: பரமன்
குறிச்சியில் அரைகுறையில் நிற்கும் பேவர் பிளாக் சாலைகளால் வாகனஓட்டிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். பரமன்குறிச்சியில் இருந்து காயாமொழி செல்லும் சாலை பல்லாண்டுகளாக சீரமைக்கப்படாமல் சிதிலமடைந்தது. இதுகுறித்த புகார்களை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரமைக்கப்பட்டது. இதில் அரங்கன்விளை பகுதியில் இருந்து சுமார் 100மீட்டர் தொலைவிற்கு தார்ச்சாலை அமைப்பதற்குப் பதிலாக சரள் கொண்டே சாலை அமைத்திருந்தனர். இந்நிலையில் சாலைகள் அமைக்காமல் விடப்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்களை கொண்டு சாலைகளை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.