×

பாகிஸ்தானில் ரயில் தீப்பிடித்து 7 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு லாகூர் நோக்கி கராச்சி பயணிகள் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் சிந்து மாகாணத்தில் ரயில் சென்றபோது, அதன் சரக்கு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

உடனே ரயில் தண்டோ மஸ்திகான் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சுமார் 40 நிமிட நேரப்போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாகிஸ்தானில் ரயில் தீப்பிடித்து 7 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Karachi ,
× RELATED பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில்...