×

4 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

 

சென்னை, செப்.2: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிக்கை: மயிலாப்பூர், கே.கே நகர், அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை கோட்டங்களில் செப்.3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும். மயிலாப்பூர் கோட்டத்திற்கு கோடம்பாக்கம் நெடுஞ்சாலை மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில் உள்ள 110 கி.வோ. வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய மயிலாப்பூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,

கே.கே.நகர் கோட்டத்திற்கு அண்ணா மெயின் ரோட்டில் உள்ள 110 கி.வோ கே.கே. நகர் துணைமின் நிலைய வளாக செயற் பொறியாளர் அலுவலகத்திலும், அம்பத்தூர் கோட்டத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை 3வது மெயின் ரோட்டில் உள்ள துணைமின் நிலைய வளாக செயற் பொறியாளர் அலுவலகத்திலும், தண்டையார்பேட்டை கோட்டத்திற்கு டி.எச்.ரோடு மணிக்கூண்டு எதிரில் உள்ள செயற் பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறும்.  பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 4 கோட்டங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Mylapore ,KK Nagar ,Ambattur ,Thandaiarpet ,
× RELATED எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்