×

மின்னல் தாக்கி தந்தை மகன் உட்பட 3 பேர் பலி


சரண்: பீகார் மாநிலம் சரண் மாவட்டம் பெல்டி பகுதியில் நேற்று மாலை இடியுடன் கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது தந்தையும், மகனும் வயலுக்கு யூரியா தெளிக்கச் சென்றனர். மேலும் 2 வாலிபர்கள் வயலில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழையில் இருந்து தப்பிப்பதற்காக, அவர்கள் நான்கு பேரும் மரத்தின் கீழ் நின்றிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்’’ என்றனர்.

The post மின்னல் தாக்கி தந்தை மகன் உட்பட 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Saran ,Bihar ,Beldi ,Saran district ,Dinakaran ,
× RELATED மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது