சென்னை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 30 விமானங்கள் தாமதமானது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து, மும்பைக்கு நேற்று காலை 9:40 மணிக்கு செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 4:30 மணிக்கு ஐதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள், மற்றும் காலை 8:55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் வருகை விமானம் ஆகிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் சென்னையில் இருந்து புறப்படும் சிங்கப்பூர், துபாய், சார்ஜா, இலங்கை, அந்தமான், மும்பை, டெல்லி, பெங்களூர், ஜோத்பூர், ஐதராபாத், கொல்கத்தா, சீரடி, மதுரை உள்ளிட்ட 23 புறப்பாடு விமானங்கள் மற்றும் துபாய், இலங்கை, மும்பை, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட 7 வருகை விமானங்கள் என 30 விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டது.
The post சென்னையில் 30 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.