×

28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை: தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் நேற்று 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றும் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 18,716 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 230 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்து வீடு  திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 34,14,933 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.      …

The post 28 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை தமிழகத்தில் 25 பேருக்கு கொரோனா தொற்று appeared first on Dinakaran.

Tags : Corona ,25 people ,Tamil Nadu ,Chennai ,Corona pandemic ,
× RELATED மறியலில் ஈடுபட்ட 25 பேர் மீது வழக்கு